
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது சீனா பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த நெருக்கடியான காலப்பகுதியில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் சீனா துணை வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.