பௌத்த இலக்கியம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் புருனோ திவாகர என்பவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) மாலை கைது செய்துள்ளனர்.
இதன்படி, சுமார் 8 மணிநேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள அவர் தொடர்பில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நடாஷா எத்ரிசூரிய என்ற பெண் யூடியூப் சேனலின் ஊடாக வெளியிட்ட விடையங்களை பரப்புவதற்கு இவர் ஊக்குவித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.