முன்மொழியப்பட்ட சட்ட தீர்வின் விதிமுறைகளின் கீழ் மறைநிலை அம்சத்தின் கீழ் பில்லியன் கணக்கான பதிவுகளை நீக்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Incognito பயனர்களின் தரவு சேமிப்பக சக்தியை குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்படுத்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் மறைநிலையில் உலாவும்போது கூட பயனர் தரவைச் சேகரிப்பதன் மூலம் மக்களின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், 5 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த வழக்கில் கூகுள் ஏற்கனவே மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் Incognito பயனர்களின் தரவுகளை நீக்குவது அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பொருந்தும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலாவல் வரலாறு சேமிக்கப்படாததால், மறைநிலை பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் குறித்த வழக்கைத் தீர்ப்பதற்கு நிறுவனம் என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.