சைபர் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று பிற்பகல் முதல் மீளமைக்கப்படும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் தொடர்பான அனைத்து தரவுகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதுப்பிப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்தா தெரிவித்தார்.
அத்தோடு, சைபர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையும் இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட உள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.