புதன்கிழமை (10) அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 23 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை ஆண் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் அறையில் இருந்த சில நிமிடங்களில், பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.