அஹங்கம பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, அச்சுப்பொறி மற்றும் தாள்கள் அச்சிடப்பட்ட தாள்கள் என்பன சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இமதுவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என்பதுடன் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.