சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்ற பல்கேரிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பதவிக்கு கிறிஸ்டலினா ஜார்ஜீவா மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதுடன் குறித்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கிறிஸ்டலினா ஜார்ஜீவா அக்டோபர் 1, 2019 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகின்றார்.