பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் உடன்படிக்கையில் ஈடுபட்டதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு குறித்த முடிவை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், ஆறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இந்த எம்பிக்கள், பின்னர் கட்சியிலிருந்து விலகி, சபையில் சுயேச்சையாக அமர முடிவு செய்தனர். புதிய கூட்டணியை அமைக்க முக்கிய எதிர்க்கட்சியுடன் சமீபத்தில் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.