இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
“19 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, தற்போது சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இதுவரை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறப்படும் 23 இந்திய இழுவை படகுகளையும், 178 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் தடுத்து வைத்து, சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, கடந்த மாத இறுதியில் இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளைக் கைப்பற்றியது.
ஏப்ரல் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இங்குள்ள அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி மீது ஆளும் பாஜக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்கு மத்தியில் 38 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கையில் இருந்து தமிழகத்தை பிரிக்கும் ஒரு குறுகிய நீரோடையில், இரு நாட்டு மீனவர்களின் வளமான மீன்பிடித் தளமாகும். இரு நாட்டு மீனவர்களும் ஒருவரது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 240 இந்திய மீனவர்களையும் 35 இழுவை படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.
ஆதாரம்: நியூஸ்18
–ஏஜென்சிகள்