சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
உடல் பயிற்சியின்மையே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி பாவனை அதிகரித்துள்ளமையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் சுறுசுறுப்பான வாழ்க்கையிலிருந்து விலகியுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.