இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் இருவர் உட்பட நால்வர் பெருமளவிலான சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருந்த நிலையில் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐசி, மெத்தம்பேட்டமைன் வகை போதைப்பொருள் கைப்பேற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.