ரம்பே – மல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (19) மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கலதன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவர் எனவும், காயமடைந்த சாரதி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.