மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு இன்னமும் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 20 முதல் 30 வீதமான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது, சில மருந்தகங்களில் மருந்தாளர்கள் அல்லாதவர்களும் மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.