ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்று (21) ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தேவாலயங்களில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளுக்கு விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதன்படி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சர்வ சமயத் தலைவர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.45 மணிக்கு, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மணிகள் அடிக்கப்பட்டு, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
அத்துடன் இன்று காலை 8.45 மணியளவில் உதவி ஆயர் தலைமையில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் திருப்பலி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா பாடசாலை மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு கொண்டாட்டமும் மாலை 3.30 மணிக்கு மாரிஸ்டெல்லா மைதானத்தில் இருந்து ஆரம்பமா செபஸ்தியார் தேவாலயம் வரை கர்தினால், ஆயர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் மக்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடைபெறும்.
அதன் பின்னர், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்கள் தலைமையில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஜெப வழிபாடும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆராதனையின் போது, அந்த தேவாலயங்களில் இறந்த பக்தர்களை “விசுவாசத்தின் சாட்சிகள்” என்று பெயரிடுமாறு கோரி, கத்தோலிக்க பக்தர்கள் தங்கள் கையொப்ப நகல்களை மாண்புமிகு கர்தினால் அவர்களிடம் கையளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.