சீனாவுடன் இணைந்து தொடங்கவிருந்த சரக்கு ரயில் திட்டத்தை கைவிட பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது.
மாறாக, இது தொடர்பான திட்டத்திற்கான மாற்று நிதி ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா அல்லது ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற பிலிப்பைன்ஸ் முயற்சிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தலைவர்களுக்கு இடையே நடந்த சந்திப்பிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், 50 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ செலவில் இத்திட்டத்தின் மூலம் அமெரிக்கா இராணுவ தளம் வணிக மையமாக மாறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா அல்லது ஜப்பான் முதலீட்டு வாய்ப்பை சொந்தமாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ரயில்வே உள்ளிட்ட 03 திட்டங்களுக்கு இனி சீனாக் கடன்களை எடுக்கப் போவதில்லை என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், தென் சீனக் கடலை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் இத்தகைய கடுமையான முடிவை எடுத்துள்ளது.