ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு, கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள துஷ்மந்த மித்ரபாலவுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் மற்றுமொரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக தலைமைச் செயலாளரால் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.