வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரங்கன ஷிலிபினி தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இருவரையும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.