பேருவளையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரதான வியாபாரி ஒருவரையும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 11 சந்தேக நபர்களையும் பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து பேருவளை காவல்துறையின் விசேட பொலிஸ் குழுவினால் பேருவளை மருதானை வெட்டிமராஜபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல பிரதேசங்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரதான சந்தேக நபர் பேருவளை, மருதானை மற்றும் வெட்டிமராஜபுர, மஹகொட போன்ற பிரதேசங்களில் நீண்டகாலமாக மிக நுணுக்கமாக இந்த ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பிரதான சந்தேக நபருக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.