காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளுக்காக 250 மில்லியன் ரூபா பெறுமதியான புதிதாக நிறுவப்பட்ட சீ.டி ஸ்கேனர் இன்று வழங்கப்பட்டது.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன சீ.டி ஸ்கேனர் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சீ.டி ஸ்கேனர் இயந்திரம் கடந்த திங்கட்கிழமை நிறுவப்பட்டு இன்று வரை இயந்திரத்தின் செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டு, இன்று முதல் நோயாளர்களின் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, எதிர்வரும் வருடத்தில் வைத்தியசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு முழு மருத்துவ உபகரணங்களுக்கும் 100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.