மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் காணாமல் போன துப்பாக்கி, அப்பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு காணாமல் போன துப்பாக்கியை தேடி வருவதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வில்கமுவ, நுககொல்லவில் கடையொன்றை நடத்தும் பெண் ஒருவர் தனது கடைக்கு முன்னால் பௌத்த விகாரைக்கு சென்றபோது குறித்த துப்பாக்கி அங்கு இருப்பதைக் கண்டு வில்கமுவ பொலிஸாருக்கு அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.