ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் விசேட பயிற்சியளிக்கப்பட்ட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவின் அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.
களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் நடைபெற்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கும் பாதாள உலகத்திற்கும் எதிரான விசேட அதிரடிப்படையினரால் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவிற்கான அணிவகுப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த அணிவகுப்பில் 48 மோட்டார் சைக்கிள்களுடன் பயிற்சி பெற்ற 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர் .
மேலும், இதில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை கொழும்பு குற்றப்பிரிவுக்கு நியமித்து மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடத்தல்காரர்களை ஒடுக்குவதே முதன்மை நோக்கமாகும்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் மேலும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.