இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட Pfizer தடுப்பூசிகளின் கையிருப்பு காலாவதியான போதிலும், கொவிட் எதிர்ப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியான போதிலும், நாட்டில் காலாவதியாகாத ஏனைய தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தேவைப்படுபவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள காலாவதியான தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியது.
அதன்போது பதிலளித்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட Pfizer தடுப்பூசி மருந்தின் ஒரு தொகுதி அதாவது 7.5 மில்லியன் டோஸ்கள் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி காலாவதியாகியுள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி கையிருப்பு காலாவதியாகும் முன் மியன்மார் அல்லது தென்னாப்பிரிக்காவிற்கு வழங்க அரசாங்கம் முயற்சித்தது, ஆனால் அது தோல்வியடைந்தது. உலகின் பல நாடுகளாலும் கொள்வனவு செய்யப்பட்ட அதிகளவான ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கையில் காலாவதியாகிவிட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.