(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தினுடைய தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், பெண் ஆளுமைகளைக் கெளரவிப்பு நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தலைவியாகிய எம்.எச். ஜிப்ரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையினுடைய தவிசாளர் எம்.எஸ்.நளீம் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், பதினொரு பெண் கவிஞர்களினது கவிதைகள் அடங்கிய தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு , ஏறாவூரில் உள்ள பல்துறை சார்ந்த பெண் ஆளுமைகள் கெளரவிக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.