2023 வரவு செலவுத் திட்டத்தின் படி, வீசா கட்டணங்கள் மற்றும் ஏனைய குடிவரவு சேவைக் கட்டணங்களை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான முன்னதாக இருந்த ரூ.345,000 ஆக இருந்த கட்டணகடடனத்தினை 07 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலுத்தக் கூடியதாக திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டண உயர்வு 100% அதிகமாகஉள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இந்த கட்டண உயர்வு டிசம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருகின்றது.
அத்துடன், மனைவி அல்லது 22 வயதுக்குட்பட்ட பிள்ளைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணமாக இருந்த 57,500 ரூபாவினை தற்போது 500 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது,
மேலும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த இரண்டு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கவும், அதன்படி குழந்தைகளிடம் இருந்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்க்காக 55 டொலராகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.