மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொனபொல கும்புக தெற்கு பகுதியில் இன்று காலை காரில் பயணித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பாணந்துறை வடக்கு, ஹொரேதுடுவ கெமுனு மாவத்தையைச் சேர்ந்த தர்ஷன் சேனாநாயக்க (வயது 36) என்ற மர ஆலை உரிமையாளரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், காரை ஓட்டி வந்த மில் உரிமையாளருக்கு சமிக்ஞை செய்து காரை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறித்த அந்த இடத்தில் வெற்று வெடிமருந்து உறை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி வியாபாரியினுடைய கழுத்தில் பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு வந்த பிரதேசவாசிகள் காயமடைந்த நபரை அம்பியூலன்ஸ் மூலம் ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் மேலும்,
தெரிவித்தனர்.