மோதர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் 14 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ‘உதேனி’ அல்லது ‘டிஸ்கோ’ என்ற புனைப்பெயர் கொண்ட 40 வயதுடைய சந்தேகநபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது, அங்கு 04 கூரிய ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.