இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஃபைசர் தடுப்பூசி மருந்தின் கையிருப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் பயன்படுத்தப்படாத மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அந்த தடுப்பூசிகளின் காலத்தை நீடிக்கலாம் என உத்தியோகபூர்வ மட்டத்தில் அறிவித்தல் விடுக்கப்படா விட்டால், உரிய தடுப்பூசிகள் வீணாகும் வாய்ப்புகள் அதிகம் எனவும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.