நூருல் ஹுதா உமர்
நேற்று (19) சனிக்கிழமை நடைபெற்ற அம்பாரை மாவட்ட பூப்பந்து போட்டியில் நிந்தவூர் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தினுடைய 5 பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல அணிகள் பங்குபற்றிய இந்த போட்டியில் நிந்தவூர் அணி மற்றும் சம்மாந்துறை அணியை அரை இறுதியில் வெற்றிபெற்று கல்முனை அணியினை இறுதிப் போட்டியிலும் வெற்றி கொண்டு மாவட்ட சம்பியனாக தெரிவாகியிருக்கின்றது.
அத்துடன் இம்மாத 28 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாகாண மட்ட போட்டிக்கும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நிந்தவூர் அணி தெரிவாகியுள்ளது இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடையமாகும் .