ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவிக்கவுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நேரம் இன்று காலை 10:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை ஒதுக்கப்படும். இது தொடர்பான விவாதம் நாளை காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
22ஆவது அரசியலமைப்புச் சட்டமூலத்துக்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான நீதித்துறை விவகாரங்களுக்கான குழு கடந்த 4ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியது.