(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் வியாழக்கிழமை (06) பாடசாலையில் இடம் பெற்றது.
அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் உதவி அதிபர் எம்.எச்.மஹ்மூத் நஸீம் இன் வழி நடாத்தலில் உதவி அதிபர், சிரேஷ்ட ஆசிரியர்களின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை, பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,
தனவந்தர்களின் அனுசரனை மற்றும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், பிரதி அதிபர்களான எம்.ரீ.எம்.
சியாத், எம்.ஏ.கமறுந்நிஸா, உதவி அதிபர்களான எம்.ஜே.எம்.றினீஸ், எம்.எச்.மஹ்மூத் நஸீம் உட்பட சிரேஷ்ட, கனிஷ்ட ஆசிரியர்களும் மாணவர்களால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.
இங்கு ஆசிரியர்களின் கலை,கலாச்சார, விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசில்கள் மற்றும் நினைவுக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பிறை எப்.எம்.அறிவிப் பாளர், கவிஞர், ஆசிரியர் ஜே. வஹாப்தீன் இந்நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கினார்.