நூருல் ஹுதா உமர்
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினுடைய பிறந்த தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வா ஹல்லாஜியாவில் நடைபெறுகின்ற மௌலித் மஜ்லிஸ் தாமாம் நிகழ்வும், மாபெரும் கந்தூரி அன்னதான நிகழ்வும் இம்முறையும் (09) ஆம் அஸ்ஷேஹ், அஸ்ஸெய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி, நக்ஸபந்தி, ஜிஸ்தி, ஜதரரூசி, ஸூபி) அவர்களினுடைய வழிகாட்டுதலில் , சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையினுடைய தலைவர் எம்.எச்.எம்.றஸான் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் சற்குரு இளைஞர் பேரவையினுடைய செயலாளரான ஏ.எம்.அஸ்பான் (அல்-கெளஸி) மற்றும் பொருளாளரான எம்.எம். முஸ்ரிப், உறுப்பினர்கள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள், மற்றும் அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தினுடைய தலைவர் சட்டத்தரணி அஸ்ஸெய்யித் மர்சூம் மெளலானா மற்றும் அஸ்ஸெய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்) அவர்கள் அல்-வகிதிய்யா அரபுக் கல்லுரியினுடைய தலைவரான எம்.எம்.சப்ராஸ் மன்சூர் மற்றும் செலக்ஸஷன் கோல்ட் கவுஸினுடைய உரிமையாளர் ஏ.எல்.அன்வர் சதாத் அவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.