இறக்குமதி செய்யப்பட்ட நான்கு வகையான இந்திய இருமல் சிரப் காரணமாக காம்பியாவில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 66 குழந்தைகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காம்பியாவுக்கு மட்டுமே இந்த சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதாக இந்திய அதிகாரிகளும், இருமல் சிரப் தயாரிப்பாளரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நான்கு வகையான இருமல் சிரப் குறித்து உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது.
மேலும் அந்த சிரப்களின் ஆய்வக ஆய்வின்படி, ஏற்றுக்கொள்ள முடியாத இரசாயனங்கள் கலந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
தரமற்ற பொருட்களை ஏற்றுமதி செய்ததற்காக வியட்நாமால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 40 இந்திய மருந்து நிறுவனங்களில் இந்த இருமல் மருந்தை தயாரித்த நிறுவனமும் ஒன்று என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.