விவசாயிகளுக்கு வரும் பருவத்திற்கான பயிர்க்கடன்களை வங்கிகள் ஏற்கனவே வழங்கத் தொடங்கியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பயிர்க்கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பருவத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நெல் வயலின் அளவு எட்டு லட்சத்து 14,678 ஹெக்டேர் ஆகும். பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த நெற்பயிர்களின் தொகையில் நூற்றுக்கு நூறு வீதம் நெற்பயிர்களின் அளவு காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் 2022-2023 பருவகாலத்திற்கான பயிர்க்கடன்களை வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில் கடந்த 14ஆம் திகதி 11 விவசாயிகளுக்கு 50,000 ரூபா வழங்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.