மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க்கில் வென்ற ஏஞ்சலியா குணசேகரா, போட்டியாளர்கள் யாரும் சண்டையில் ஈடுபடவில்லை என்றும், போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே சண்டை நடந்ததாகவும் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், நியூயோர்க்கில் உள்ள இலங்கை சமூகம், மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் போட்டியை முதன் முறையாக ஏற்பாடு செய்தது, இலங்கையின் தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக, குறித்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இருப்பினும், நிகழ்வின் பங்கேற்பாளர்களிடையே சண்டையிடும் வீடியோக்கள் பரவியதால், இது உலகில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
அந்த இடத்தில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வீடியோக்கள் சுட்டிக்காட்டுகின்றது.
மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் போட்டியின் வெற்றியாளரான ஏஞ்சலியா குணசேகர, போட்டியில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்களுக்கும் இந்த மோதலுக்கும் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, அவர் வதந்திகளை முற்றிலும் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.