கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதிச் செயலாளர் ஜோன் பாஸ் மற்றும் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புதிய தூதரக திறப்பு விழாவில் கலந்துகொள்வது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த கௌரவம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் மற்றும் இலங்கையின் கட்டிடக்கலை, கலாசாரம் மற்றும் கலைக் கருப்பொருள்களுக்கு மதிப்பளித்து இந்த கட்டிடத்தை உருவாக்க இரு நாட்டு மக்களும் அர்ப்பணிப்புடன் உழைத்ததாகவும் ஜூலி சாங் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவப் பிரிவின் துணைச் செயலாளர் ஜோன் பாஸ், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த புதிய தூதரக அலுவலகக் கட்டிடம் காட்டுவதாக தெரிவித்தார்.
காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பழைய கட்டிடத்திற்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.