இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் கையாட்கள் மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன் சிரேஷ்ட உபதலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வறிய மக்களுக்கான வரவு செலவு திட்டத்தில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.