சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டுபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் இலங்கைப் பெண்களை வேலைக்கு அனுப்புவதன் மூலம் இலங்கைப் பெண்கள் விபச்சாரத்திற்கு சந்தைப்படுத்தப்படுகின்றனர் என்ற செய்தி தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளது. சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 1989 என்ற தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் திறந்திருக்கும் எனவும், புலனாய்வுத் திணைக்களத்தின் 011 2 86 42 14 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.