பாடசாலை புத்தகங்கள் மற்றும் பேனா, பென்சில் போன்ற உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளித்துள்ளது. இதன்படி, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை மீளாய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இதேவேளை, ஓமானில் வீட்டு வேலை செய்யச் செல்லும் பெண் ஒருவர் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.