
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவை பிறப்பித்தது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக நீதிமன்ற எமது செய்தியாளர் தெரிவித்தார்.