100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை நாளை நாடு முழுவதும் விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள டெண்டர் செல்லாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு கோரியதற்கு சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்தார்.
மேலும், ஒரு மெட்ரிக் தொன் உள்நாட்டு எரிவாயுவை தலா 129 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு எதிராக பிரயாட் முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடிதுவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மனுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதிக்குமாறு மனுதாரர் நாகாநந்த கொடிதுவக்கு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆட்சேபனை தெரிவித்துள்ளதோடு நீதிமன்றில் வாதிடுகையில், அரசியலமைப்பின் 35 ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு விலக்குரிமை உள்ளதால், அவரை இந்த வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மனுவை ஜனவரி 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அன்றைய தினம் இது தொடர்பான எழுத்துமூல உரைகளை சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.