களுத்துறை, தெபுவன, கிளாடன் வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையின் பின்னரே இக் கைது இடம்பெற்றுள்ளதாகவும், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.