ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா மற்றும் ஏனைய பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த உதவி செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் தொடர்பில் தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.