நான்காம் மற்றும் ஐந்தாம் தொழிற்புரட்சிகளின் புதிய தொழில் நுட்பத்தையும் கலப்பு டிஜிட்டல் பொருளாதாரத்தையும் இலங்கையின் தொழில்துறையில் சேர்ப்பதற்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி நாட்டில் கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, புதிய தொழில் புரட்சிகளின் தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்த நாட்டில் உள்ள பல்வேறு தொழில்கள் தற்போதைய தொழில்நுட்ப மட்டத்திலிருந்து எவ்வாறு நகர முடியும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போதைய நெருக்கடியை சமாளித்து உற்பத்தி மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இக்கண்காட்சியை ஏற்பாடு செய்வதன் நோக்கம் எனவும் கலந்துரையாடப்பட்டது.