வேலையற்ற இளைஞர் சமூகத்தினருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதே குறித்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அமைச்சின் சிறிய அளவிலான விவசாய முயற்சியாளர் பங்கேற்பு திட்டத்தின் கீழ் அரச வங்கிகளில் இருந்து 06 வீதம் 05 பத்தில் வட்டி வீதத்தில் இந்தக் கடன் தொகை வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதுடன் குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 50 இளைஞர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
மேலும், அங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இளைஞர்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே தற்போது தமது அமைச்சு எதிர்நோக்கும் பிரதான சவாலாகும் என தெரிவித்தார்.