தலவாக்கலை, மிடில்டன் வத்த பிரதேசத்தில் தோட்ட வீடுகள் வரிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. நுவரெலியா நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருந்ததாகவும் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் எமது செய்தியாளர் எமக்குத் தெரிவித்துள்ளார்.