கொழும்பு மாநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 99% திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் 55 உப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் மற்றும் கொழும்பு மாநகர சபை என்பன இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.
மேலும், கொழும்பு மாநகர நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை மற்றும் கொலன்னாவ மாநகர சபை என்பன உள்ளடக்கப்படு கின்றமை குறிப்பிடதக்கதாகும்.