(படம்- நூருல் ஹுதா உமர் )
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்- அமான் சூப்பர் சல்லேங்கர்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு வவுனியா, சாளம்பைக் குளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.