நிலக்கரியை இறக்குமதி செய்ய முன்வந்த நிறுவனங்களிடம் இருந்து 30 நாட்களுக்குள் கொள்முதல் செய்தால், தற்போதுள்ள மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க முடியும் என மின்சார பயனீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான அனைத்து தகவல்களையும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
இடைத்தரகர்கள் இன்றி எரிபொருளை இறக்குமதி செய்தால் 200 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மக்களுக்கு பெற்றோலை வழங்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு நிலக்கரி கையிருப்புக்கு முன்பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.