சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கருத்து தெரிவித்தார்.
நாட்டின் கடனை சரியான முறையில் மறுசீரமைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் அறிக்கை அளித்த பின்னர் வழங்கப்படும் உதவிகள் குறித்து முடிவெடுப்போம் என குறிப்பிட்டார் .
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து நாடுகளுடனும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.