தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இம்மாதம் மின்வெட்டு காலம் மேலும் அதிகரிக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலக்கரி மின்சார விநியோகத்திற்கு போதுமானது என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிநுட்பக் கோளாறினால் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் உற்பத்தி இயந்திரம் நேற்று மீண்டும் தேசிய இணைப்புடன் இணைக்கப்பட்டது.
இதன்படி 300 மெகாவோட் திறன் கொண்ட மின் உற்பத்தி இயந்திரம் தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்த மின்நிலையத்தின் முதல் ஜெனரேட்டரும் தற்போது இயங்கி வருகின்றது. திருத்தப் பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 02வது மின் உற்பத்தி இயந்திரத்தை இன்னும் 02 வாரங்களில் தேசிய அமைப்பில் இணைக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.